ஆடு மேய்க்க ஆட்கள் தேவை என விளம்பரம் செய்த சிவகாசியை சேர்ந்த முதியவர் ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
நாட்டில் இன்று படித்த இளைஞர்களுக்கே வேலை இல்லாத சுழலில்,ஏதோ ஒரு வருமானம் வந்தால் போதும் என கிடைத்த வேலைக்கு மாதம் பத்தாயிரம், பதினைந்தாயிரத்துக்கு வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் ஆடு மேய்க்க ஆட்கள் தேவை என முதியவர் செய்த விளம்பரம் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் கிருஷ்ணம நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் கி. அழகர்சாமி, ஆடு வளர்க்கும் இவர் ஆடு மேய்க்க ஆட்கள் தேவை என விளம்பர பேனர் ஒன்றை தூக்கி பிடிக்கும் படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த புகைப்படத்தில் ஆடு மேய்க்க உள்ளூர் சம்பளம் 600 ரூபாய், வெளியூர் சம்பளம் 700 ரூபாய், வெளியூர் செல்ல 1000 ரூபாய் எனவும் மூன்று வேளை சைவ சாப்பாட்டுடன் ஆடு மேய்க்க ஆட்கள் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை தான் இன்றைய இளைஞர்கள் ஆடு மேய்க்க இவ்வளவு சம்பளமா? என பகிர்ந்து வருகின்றனர்.
பழைய புகைப்படம்:
இந்த புகைப்படம் குறித்து விசாரித்த போது இந்த படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் அது தான் தற்போது மீண்டும் வைரல் ஆகி வருகிறது என்றும் தெரியவந்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com