கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும் வகையில், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான அவர் தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாகத் தொடுக்கப்பட்டு `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்” என்ற நூல் தயாராகியிருக்கிறது. இந்த நூல் வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது.


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நூலை வெளியிட, முதல் பிரதியை உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய கமல்ஹாசன், “தமிழ்நாட்டின் முகவரி விகடனும் மு.கருணாநிதியும்தான். ஜனநாயகம், சமூகநீதி, கூட்டாட்சி என தென்னாட்டின் முக்கிய முகமாகத் திகழ்கிறார் கலைஞர். தாழக்கிடப்பவரை தற்காப்பதுதான் தர்மம், கலைஞரின் தர்மம் அதுதான். கடந்த நூற்றாண்டின் 50 ஆண்டுகள் பெரியார், அண்ணா ஆகியோருக்கானவை என்றால், அடுத்த 50 ஆண்டுகள் கலைஞர் யுகம் எனலாம்.
நன்றி
Publisher: www.vikatan.com