விஜய் எடுக்கப்போகும் அடுத்தக்கட்ட முயற்சி..? மதுரை மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

Vijay next attemptA shock awaits the people of Madurai

பல ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி அரசியலுக்கு வருவது குறித்து ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் நடிகர் விஜய். அந்த அறிவிப்பில், புதிதாக கட்சி தொடங்கியுள்ளதாகவும் அந்த கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட “தமிழக வெற்றி கழகம்” போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.

Also Read > நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி : பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியது குறித்த வெளியான அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜயின் தமிழக வெற்றி கழகம் இந்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் மட்டுமே போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கியதுடன் நிற்காமல் அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக பொறுப்பாளர்களை சேர்க்கவும், பொறுப்பாளர்களை நியமித்த பிறகு மாநாடு நடத்த போவதாகவும் கூறப்படுகிறது. இந்த மாநாடானது வருகிற ஏப்ரல் மாதம் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாவும் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வியக்கும் வகையில் இந்த மாநாட்டை நடத்தத் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *