இந்த வெற்றி குறித்து பேசியிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்த தேர்தல் முடிவுகள் தேசத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் அடிப்படை உணர்வு, பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதையேப் பிரதிபலிக்கிறது” என்றிருக்கிறார்.

அதேபோல, இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசியிருக்கும் பிரதமர் மோடி, “நேர்மையும் நல்ல நிர்வாகமும் வெற்றி பெற்றிருக்கிறது. ஊழலுக்கு எதிரான எங்கள் போருக்கு மக்கள் ஆதரவு அளித்திருக்கின்றனர். ஊழல், திருப்திபடுத்தும் அரசியல், வாரிசு அரசியலை மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த முடிவுகள் அமைந்திருக்கின்றன. தற்சார்பு இந்தியா, வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நமது இலக்குக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை இந்த வெற்றி உணர்த்துகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில மக்கள் பா.ஜ.க மீது அன்பை பொழிந்திருக்கின்றனர். தெலங்கானாவிலும் பா.ஜ.க-வின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
