இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க-வை விமர்சித்த, காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரத்தை, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறைமுகமாகச் சாடியிருக்கிறார். முன்னதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகிவிட்டதாக அரசு கூறுகிறது. இந்த மசோதா இப்போது சட்டமாகியிருக்கலாம். ஆனால், அது நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகும்.


இப்படியிருக்க, நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ப.சிதம்பரத்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் சாடிய ஜக்தீப் தன்கர், “மத்திய அமைச்சராக இருந்து, பல உயர் பதவிகளை வகித்த மூத்த ராஜ்ய சபா உறுப்பினர் ஒருவர், மகளிர் இட ஒதுக்கீடு குறித்து கூறிய கருத்தால், எனது வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. அவ்வாறு அவர் கூறியது, ஒரு சிதைந்த மனநிலை. இன்று ஒரு செடியை நாடுகிறோம் என்றால் உடனே அது கனி தரத் தொடங்கிவிடுமா அல்லது கல்வி நிறுவனத்தில் ஒருவர் சேர்ந்தவுடனே பட்டம் பெற்றுவிடுவாரா… மக்களின் அறியாமையை அரசியலாக்குவது இவ்வாறு வெட்கக்கேடு” என்று கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com