சென்னை வேளச்சேரியின் பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் 8 அடுக்குகளை கொண்ட உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் இன்டெரியர் வேலை தீவிரமாக நடந்து வரும் நிலையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீ வேகமாக பரவியுள்ளது, இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து புகை மண்டலாமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதிலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்துக்குளான் கட்டடத்தின் அருகிலேயே பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் இருப்பதால் அங்கு கூட்டமும் அதிகாமாக காணப்படுகிறது. இதனால் வேளச்சேரி காவல் துறையினர் மக்கள் கூ ட்டத்தை தடுத்து வருகின்றனர்.
புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலார்கள் கண்ணாடிகளை உடைத்து கட்டடத்தில் இருந்து வெளியே வரும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. மேலும் முழுவதுமாக தீயை அணைத்த பிறகு தான் சேதாரம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.
நன்றி
Publisher: 1newsnation.com