அதைத் தொடர்ந்து `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்தும், அ.தி.மு.க அதனை ஆதரிப்பது குறித்தும் பேசிய திருமாவளவன், “ `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமா, சாத்தியமில்லையா என்பது பிரச்னையல்ல. அது வேண்டுமா வேண்டாமா என்பதுதான் பிரச்னை. வேண்டாம் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
`ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை நெருக்கடிக்குள்ளாக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கான மதிப்பீடுகளைச் சிதைக்கும், அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும். எதேச்சதிகாரமான போக்கு தலை தூக்குவதற்கு இடம் கொடுக்கும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும். எனவேதான் இதனை வேண்டாம் என்று சொல்கிறோம். அ.தி.மு.க-வுக்கு வேறு வழியில்லை. பா.ஜ.க எந்த முடிவு எடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது என்கிற நெருக்கடிக்கு அந்தக் கட்சியினர் ஆளாகியிருக்கிறார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com