அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்ப்யூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படுவதாகவும், 2024 ஜனவரி 29ஆம் தேதி கணினி வழித் தேர்வு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com
