
பாகிஸ்தானில் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு 70 சதவீதம் பெண்கள் வேலை இல்லாமல் இருப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பெண்களை குறித்து கேலப் பாகிஸ்தான் மற்றும் பிரைட் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் அந்த அமைப்பு வேலையில் இருப்போர், வேலையில்லாதோர் மற்றும் தொழிலாளர் அமைப்பில் இல்லாதவர்கள் என மூன்று பிரிவுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த அறிக்கையில் என்ஜினீயரிங் (பொறியியல்) படிப்பை படித்துள்ள 28,920 பெண்களில் 20.9 சதவீத பெண்கள் வேலை ஏதும் இல்லாமல் உள்ளனர் என தெரியவந்து உள்ளது. அதோடு என்ஜினீயரிங் படித்த பெண்களில் 50.9 சதவீத பெண்கள் தொழிலில் இருந்து விலகி உள்ளனர் என்றும், மேலும் 28 சதவீத பெண்கள் வேலையில் தொடர்ந்து உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Also Read >> மின்வாரிய துறையில் 55,000 காலி பணியிடங்கள் அதிகரிப்பு! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?
அதை தொடர்ந்து என்ஜினீயரிங் படித்த மொத்த பெண்களில் 21.1 சதவீத பெண்கள் கிராமப்புறங்களிலும், 78.9 சதவீத பெண்கள் மெட்ரோ நகரங்களிலும் வசித்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டு உள்ளது. அதோடு கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் என்ஜினீயரிங் படித்த பெண்களில் 43.9 சதவீத பெண்கள் வேலையில் உள்ளதாகவும், 36.3 சதவீத பெண்கள் வேலை எதுவும் இல்லாமல் உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதை தொடர்ந்து கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் என்ஜினீயரிங் படித்தகளில் 64 சதவீத பெண்கள் திருமணம் ஆனவர்கள் என்றும், 28.4 சதவீத பெண்கள் திருமணம் ஆகாமல் தனித்து வசிக்கின்றனர் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் என்ஜினீயரிங் படித்த பெண்களில் 25 முதல்34 வயதுடையவர்கள் அதிக எண்ணிக்கையில் (50.9 சதவீதம்) உள்ளனர். இவர்களை தொடர்ந்து 35 முதல் 44 வயதுடையவர்கள் (21.7 சதவீதம்) உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in