இந்த நிலையில் நேற்று முன்தினம் இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “தமிழகத்தில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் தந்திருக்கிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை வழியாக மக்கள் செல்லும் சாலை தடுப்புகளால் அடைக்கப்பட்டிருக்கிறது. ஆளுநர் ஊரில் இல்லாதபோதும் சாலையை மூடி வைத்திருக்கின்றனர். பாரதி பூங்காவுக்கு அந்த வழியாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, பூட்டிவைக்கப்பட்டிருக்கிறது.
தடுப்புகளை அகற்றி மக்களின் பயன்பாட்டுக்கு முதலில் தமிழிசை திறக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் ராஜ் நிவாஸ் சாலை முன்பிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. 5 ஆண்டுகள் 8 மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கபட்டிருக்கும் அந்த சாலைகளின் வழியே பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
