சேலம்: `ஆட்சியரும், ஆணையரும் இபிஎஸ்-ஸுக்கு ஆதரவாகச்

சேலம் தி.மு.க அவைத் தலைவராக இருந்து வருபவர் ஜி.கே.சுபா.ஷ் இவர், அண்மையில் ஓர் ஆடியோ பதிவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதில், “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, சேலம் மாவட்டத்தில் அமோக வெற்றி பெறும் என்ற கனவை, இங்குள்ள இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழித்தோண்டி புதைக்கும் வேலையைச் செய்து கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்டத்தில் பதவிக்கு வந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்.

ஜி.கே சுபாஷ்ஜி.கே சுபாஷ்

ஜி.கே சுபாஷ்
திமுக அவைத் தலைவர்

இதனை தி.மு.க-காரனாக நான் சொல்லவில்லை. அ.தி.மு.க-வில் இருப்பவர்களே அப்படித்தான் சொல்கின்றனர். மேற்படி இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், எடப்பாடி உடன் பேசி வைத்துக்கொண்டு ஆட்சி செய்து வருகின்றனர். மாநகராட்சி ஆணையராக இருந்து வரும் பாலச்சந்திரன்,

ஆட்சியர் கார்மேகம்ஆட்சியர் கார்மேகம்

ஆட்சியர் கார்மேகம்

மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாலும், ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து விட்டுத்தான் எந்தவித நடவடிக்கையும் எடுத்து வருகிறாராம். இதனை நான் சொல்லவில்லை. அ.தி.மு.க கவுன்சிலர்கள், தி.மு.க விசுவாசிகள் என்னிடம் வந்து கூறுகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *