தூத்துக்குடி மாநகராட்சியின் டி.எம்.பி காலனி பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்ததில், அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தரைதளத்தில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் இடுப்பளவுக்கு தேங்கி நின்றதில், பாதிப்படைந்த மக்கள் அனைவரும் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் கட்சியினர் சார்பில் உணவு கொடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று காலை உணவுக்குப் பின்பு, முகாமில் உள்ள மக்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், பால், பிஸ்கட் உட்பட எதுவும் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
