`கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு; அம்மாவின் தொண்டர்கள்

மதுரை, நெல்லை மண்டல அ.ம.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வந்திருந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கன்னியாகுமரி முதல் திண்டுக்கல் வரையிலான 59 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

அ.ம.மு.க-வின் தேர்தல் கூட்டணி டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரியிலோ முடிவாகும்” என்றவரிடம்

“சசிகலாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா?” என்ற கேள்விக்கு,

“அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அதனால், ஓ.பன்னீர்செல்வம் எங்களோடு பணியாற்றி வருகிறார். எங்களோடு வரும் அனைவரோடும் சேர்ந்து பணியாற்றுவோம்” என்றார்.

டிடிவி தினகரன்

தே.மு.தி.க பொதுச்செயலாளராக பிரமேலதா பொறுப்பேற்றுள்ளது” குறித்த கேள்விக்கு,

தே.மு.தி.க பொதுச்செயலாளருக்கு வாழ்த்துகளை ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்” என்றார்.

`சென்னையில் மழை பாதிப்பு’ குறித்து கேள்விக்கு, பதிலளித்தவர், “தலைமைச் செயலாளர் அறிக்கைப்படி 90 சதவிகிதத்திற்கு மேல் சகஜநிலை திரும்பிவிட்டது எனவும், மற்ற ஏரியாக்களிலும் திரும்பிவிடும் எனவும் கூறியிருக்கிறார். அதன்படி நடக்கும் என நம்புகிறேன். எண்ணூர் பகுதியில் கடல்நீரில் கலந்த எண்ணெயை, உரிய உபகரணங்களை கொண்டு துரிதமாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்” என்றவர்,

ஆலோசனைக் கூட்டம்

“நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் நுழைந்த சம்பவத்தில், மத்திய அரசு நாட்டுக்கும் நாடாளுமன்றத்திற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. தி.மு.க ஆட்சி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாகப் போய்க்கொண்டிருக்கிறது” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *