சென்னை தியாகராய நகர் பகுதியில் பல மாடிகளை கொண்ட துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தினசரி லட்சக்கணக்கான பொதுமக்கள் பொருட்களை வாங்க வருவார்கள். அதே நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்றால் சொல்லவே வேண்டாம். பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு உள்ளிட்ட இடங்களில் திருவிழா போல் காட்சி அளிக்கும்.
இந்நிலையில், தி.நகரில் உள்ள லெஜெண்ட் சரவணா ஸ்டோரில் பணிபுரியும் பெண் ஊழியர் ஆலா குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள லெஜண்ட் சரவணா ஸ்டோரில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பானுப்பிரியா (25) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில், லெஜன்ட் சரவணா ஸ்டோர் மேலாளர் திரவியம் மற்றும் ஊழியர் லிங்கம் ஆகியோர் பானுப்பிரியாவை அனைவரும் முன்னிலையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பானுப்பிரியா ஸ்டோரியில் இருந்த ஆலா வை எடுத்துக் குடித்து மயக்கம் அடைந்துள்ளார். இதனால் அருகில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது. இதையடுத்து, பானுப்பிரியாவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com
