
தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 37 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 16 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதை தொடர்ந்து தற்போது சென்னையை சேர்ந்த 12 உதவி ஆணையர் உட்பட தமிழகம் முழுவதும் 37 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும் சென்னையை பொறுத்தவரை நீலாங்கரை காவல் சரக உதவி ஆணையராக இருந்த சுதர்சன் அவர்கள் தி.நகருக்கு மாற்றப்பட்டு உள்ளார். அதை தொடர்ந்து மணலியில் இருந்த தட்சிணாமூர்த்தி பூக்டைக்கும், தஞ்சையில் இருந்த சரண்யா சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், செங்கல்பட்டிலிருந்த பரத் நீலாங்கரைக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் உட்பட சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை மாற்றி அவர்கள் இடத்தில் புது அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்து உள்ளார்.
நன்றி
Publisher: jobstamil.in