அதிமுக வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறுமி

இதுகுறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷிடம் பேசினோம். “சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒரு துர்தஷ்டமான ஒரு நிகிழ்வு. யாருடைய குடும்பத்திலும் இதுபோன்ற நிகழ்வு நடக்கக்கூடாது. ஆனால், இதை வைத்து தி.மு.க அப்பட்டமான அரசியல் செய்கிறது. நிவாரணம் பொருள்களை வாங்க சிறுமியின் உறவினர் ஒருவர் வரிசையில் நின்று இருக்கிறார். அவரை நோக்கி சிறுமி நடந்துவரும்போது மயக்கமடைந்து கீழே விழுந்து இருக்கிறார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, ராஜேஷ்எடப்பாடி பழனிசாமி, ராஜேஷ்

எடப்பாடி பழனிசாமி, ராஜேஷ்

தற்போது ஆர்.டி.ஓ விசாரணையில் இருப்பதால் அதை வெளியிட முடியாது. கீழே விழுந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதே நாங்கள்தான். ஆனால், சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. சிறுமி நான்கு நாட்களுக்கு மேலாக ஒழுங்காக சாப்பிடாததே மயக்கமடைய காரணமென்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். மழை நின்று நான்கு நாட்கள் ஆகியும் அப்பகுதிக்கு ஆட்சியாளர்கள் யாரே செல்லவில்லை. அப்பகுதியினர் பசியில் வாடியிருக்கிறார்கள். நாங்கள்தான் அங்கு முதலில் நிவாரணம் வழங்கினோம். நிலைமை இப்படியிருக்க இறப்பை வைத்து கேவலமான அரசியலை தி.மு.க செய்கிறது. விசாரணை முடிந்து இறுதி அறிக்கை வரும்போது, உண்மை தெரியவரும்.” என்றார் சூடாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *