சென்னையில் மீண்டும் மழை… அடுத்த 3 மணி நேரத்தில் மேலும் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!!

Today Weather Update In Tamil Chance of rain in 15 districts in next 3 hours

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த வாரம் வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜம் புயலாக மாறி சென்னை உள்பட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையே ஒரு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில் மழை ஓய்ந்த நிலையிலும் வீடுகளில் தேங்கிய மழைநீர் வற்றாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் கரூர்,திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ALSO READ : மிக்ஜம் புயல் பாதிப்பு : தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதித்துக்கு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்கள் பெய்த கனமழையின் தாக்கத்திலிருந்து மக்கள் தற்பொழுதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த இந்த திடீர் மழையின் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *