
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை(நவம்பர் 27) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 29 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ALSO READ : தமிழக அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கான தேர்வு முடிவுகள் – நாளை வெளியீடு
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ய்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ய்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in