பாமக நிர்வாக தலைவர் ச.ராமதாஸ் அவர்கள் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணிகளை உடனே நிரப்ப வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் சுமார் 3454 பேருந்துகள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மட்டுமே இருக்கின்றன. அதில் ஒவ்வொரு நாளும் 3233 பேருந்துகள் இயங்கி வருகின்றன. அதாவது 8487 ஓட்டுனர்கள், இந்த பேருந்துகளை இயக்க இருக்க வேண்டும். ஆனால் 500 பேருந்துகள் தேவையான அளவு ஓட்டுநர் இல்லாததால் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமே தினமும் 500 பேருந்துகள் என்றால் ஒரு ஆண்டுக்கு 29.70 லட்சம் முறை பேருந்து சேவை பாதிக்கப்படுகின்றது. இதே நிலைமை தான் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் இருக்கிறது.

எனவே பாமக தலைவர் ச.ராமதாஸ் அவர்கள் காலியாக உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் 30000 மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசிடம் அறிவுறுத்தி உள்ளார்.
நன்றி
Publisher: jobstamil.in