
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதம் என்றாலே அது “தை திருநாளான பொங்கல் பண்டிகைத்தான்”. அந்த அளவிற்கு பொங்கல் பண்டிகையை தமிழகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். பொதுவாக பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கரும்பு, மாடு உள்ளிட்டவைதான். ஆனால், இன்றைய காலத்தில் பொங்கல் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொக்குப்புத்தான். ஏனென்றால் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வழங்குவதுடன் ரொக்க பணமும் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு வரப்போகும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கப்போகும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும், சமீபத்தில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஏறப்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரணம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ALSO READ : தமிழகத்தில் நாளை 190 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்..! மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…
இதனையடுத்து, வெள்ள நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகை என இரண்டும் வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும், பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000 வழங்குவது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதகாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகராப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in