
Are You Ready to Buy The Gold…?
தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று சவரனுக்கு ரூபாய் 160 அதிரடியாக குறைந்து உள்ளது நகைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலும் பண்டிகை காலங்களில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுவது இயல்பான ஒன்று. அதோடு பண்டிகை காலத்தில் நகை பிரியர்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வத்தை காட்டுவார்கள். தற்போது நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு மக்கள் தங்கம் வாங்க தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளது.
Also Read >> நயன்தாராவின் 75வது படத்தோட டைட்டில் வெளியீடு! அசத்தும் வேற லெவல் லுக்…!
அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து ஒரு சவரன் ரூபாய் 45,240 ஆகவும், ஒரு கிராமிற்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூபாய் 5,655 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை போல 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.22 குறைந்து ஒரு கிராம் ரூ.6,169 ஆகவும், ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.176 குறைந்து ரூ.49,352 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அதிரடியான விலை குறைவு காரணமாக நகைப்பிரியர்களும், நகைகளை வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in