தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, தரமற்ற உணவுகள், கெட்டுப்போன இறைச்சிகள் இருப்பது வெளிப்படையாக தெரியவந்தது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட வீடியோக்களும் ஊடகங்களில் வெளியானது. பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக பல்வேறு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், உணவு தரம் குறித்து அரசுக்கு மக்கள் எளிதில் புகாரளிக்கும் வகையில் வாட்ஸ் அப் நம்பரை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஷவர்மா, மீன் மற்றும் அனைத்து வகையான இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும்15,236 உணவகங்களை ஆய்வுசெய்து, 1,572 உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 5,018 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ரூ.8,79,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com
