“வெள்ள மீட்பில் இன்னும் வேகம் வேண்டும்; மக்களின்

தூத்துக்குடியில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் தூத்துக்குடி மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார். தூத்துக்குடியில் மில்லர்புரம் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதியில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடியை பொறுத்தவரை மழை முடிந்து மூன்று நாள்களாகியும், ஊரும் வீடுகளும் தண்ணீரில் தான் உள்ளது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் அகற்றப்படாததால், நிவாரண முகாம்களில் அதிகப்படியான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆறுதல்

வெள்ளமீட்பு பணிகளில் தமிழக அரசு இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே, மூன்று நாட்கள் கழித்து இன்றுதான் மீட்கப்பட்டிருக்கிறார் என்றால், இந்த அரசு எவ்வளவு வேகத்தில் செயல்படுகிறது, இந்த ஆட்சி எவ்வளவு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

சென்னையில், வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு நாள்கள் மின்சாரம் இல்லை என்றதும், மூன்றாவது நாள் மக்கள் சாலைக்கு வந்துவிட்டனர். ஆனால், தூத்துக்குடியில் கடந்த மூன்று நாள்களாக மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். திருச்செந்தூர் பகுதி இதைவிட இன்னும் மோசமாக உள்ளது. நிவாரண பணிகளை தாமதப்படுத்தினால் மக்களுடைய கோபத்திற்கு நாம் அனைவரும் இரையாகி விடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தூத்துக்குடியை பொறுத்தவரை மழைவெள்ளத்தை வெளியேற்றுவதற்கான திட்டம் இல்லை.

ஆறுதல்

80 மீட்டராக இருந்த பக்கிள் ஓடை அகலத்தை 20 மீட்டராக குறுக்கி தற்போது கால்வாயாக உள்ளது. காலம் காலமாக எம்.பி., எம்.எல்.ஏ.வாக உள்ளவர்கள் மழை நீரை வெளியேற்றுவதற்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை. ஆனால் வெள்ளம் வந்தால் மட்டும், இங்கு இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் வந்தோம்.. வேட்டியை மடித்து கட்டினோம்… நிவாரண பணிகளை செய்தோம் என சென்றுவிடுகிறார்கள். தூத்துக்குடியை மழைவெள்ள பாதிப்பில் இருந்து மீட்பதற்கு முழுமையான திட்டம் இல்லை. தொலைநோக்கு பார்வையில்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடுக்கப்பட்ட பணத்தை முழுமையாக திட்டமிட்டு செயல்படுத்தவில்லை. வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு எந்த திட்டமும் இல்லை. எனவே தூத்துக்குடியை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதுவரை மழைநீர் வடிகால் பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை முழுமையாக கணக்கிட வேண்டும்‌‌.

தொலைத்தொடர்பு இல்லாத கிராமங்களில் இன்னமும் மீட்பு பணிகள் நடைபெறவில்லை. எனவே மக்கள் கோபப்படுவது நியாயமானது. தி.மு.க. அமைச்சர்கள், மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்கு பயந்து கார் கண்ணாடியை இறக்காமலேயே செல்கிறார்கள். தூத்துக்குடியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருவெள்ளம் வருகிறதென்றால், இங்கு வெள்ள எச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவரவில்லை என்றுதான் அர்த்தம்.

நகர்புறத்தில் எந்த அளவு பாதிப்பு இருக்கிறதோ அதைப்போல கிராமப்புறங்களிலும் பாதிப்பு இருக்கிறது. விவசாயம் பயிர்கள் எல்லாம் வரலாறு காணாத அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. நிவாரண உதவிகளை பொதுமக்கள் உயர்த்தி கேட்பது நியாயமானது. சேதத்தை முழுமையாக கணக்கீடு செய்து அவர்களுக்கான நிதி உதவிகளை செய்ய வேண்டும்.

மக்கள் சந்திப்பு

வெள்ளத்தால் இறந்துபோன ஆடு, கோழி முதல் முழுமையாக அனைத்தையும் கணக்கிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். சேத மதிப்பு விவரங்களை கணக்கீடு செய்வதற்கு கிராம நிர்வாக அதிகாரி முதல் அரசு அதிகாரிகள் அனைவரும் களத்திற்கு வர வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *