மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிட்டது என இன்று சில பெண்கள் சந்தோஷமாக இருக்கலாம். இவர்கள் ஒரு பெண்ணுக்கு மொத்தம் 29 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் முதலில் நிறைந்த அமாவாசையாக பார்த்து ஒரு ரூபாய் போட்டிருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் பணத்தை ஒத்தையாக கொடுத்தவிட்டு கத்தையாக கொள்ளையடிப்பது தான் திமுகவின் அரசியல் ஸ்டைல். திமுக ஆட்சிக்குவந்தபிறகு சொத்துவரி, மின்கட்டணம், பத்திரப்பதிவு என பல கட்டணங்களை உயர்த்திவிட்டனர்.
உலகத்தில் முதன்மையான நாடாக இந்தியாவை கொண்டுவர வேண்டும் என மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்தியில் ஆட்சி செய்தவர்கள் நிலக்கரி, 2 ஜி என எத்தனையோ ஊழல் வழக்குகளில் சிக்கினர். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி மட்டும் சுத்தமாக இல்லை… அவரை சுற்றியுள்ள 79 மத்திய அமைச்சர்களையும் சுத்தமாக வைத்திருக்கிறார். மோடியை ஊழல்வாதி என்பவர்களுக்கு, அரசியல் அட்ரஸ் இருக்காது. அவர்களை மக்களே வேரறுத்து விடுவார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com