இது தான் விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கு காரணம்; பயில்வானின் பேச்சால் கோவமடைந்த ரசிகர்கள்..  

இது தான் விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கு காரணம்; பயில்வானின் பேச்சால் கோவமடைந்த ரசிகர்கள்..  

சினிமா விமர்சகர் என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை யூடியூபில் பேசுவதை வேலையாக கொண்டவர் பயில்வான் ரங்கநாதன். இவரின் பேச்சு பலரை எரிச்சல் அடைய செய்வதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவர் பேசி பலரின் கோவத்திற்கு ஆளாகி உள்ளார்.

ஆம், கடந்த ஒரு வருடங்களாகவே மன அழுத்தத்தில் இருந்த மீரா அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்துள்ளார். அவரின் போனை போலீசார் பறிமுதல் செய்து பார்த்த போது, அவர் இரண்டு மருத்துவர்களுக்கு உடனடியாக தனக்கு ஆலோசனை வேண்டும் எப்போது அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கும் என்று கேட்டதும், அதற்க்கு இருவருமே ஒரு குறிப்பிட்ட நாளை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அதற்குள் மிகுந்த மன அழுத்தம் காரணமாக மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பயில்வான் பேசும்போது, “நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் சில விஷயங்கள் பழித்து விடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் படங்களை எடுத்துக் கொண்டால் பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2, கொலைகாரன், ரத்தம், எமன் என்று வைத்திருந்தார். அவருடைய பட டைட்டில் கூட பழிவாங்க வாய்ப்பிருக்கிறது” என பயில்வான் கூறியிருக்கிறார். மேலும், விஜய் ஆண்டனியின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இப்போது மகளும் இதே முடிவை எடுத்துக் கொண்டிருப்பதால் ஜெனிடிக் பிரச்சனையாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் பயில்வான் எழுப்பி இருக்கிறார். இவரின் இந்த பேச்சு பலருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *