Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
என் மீது 128 வழக்குகள் இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த வழக்குகளை எடுத்துட்டு வர முடியாது. நான் மக்களுக்காக போராடி போராடி சிறைக்கு போனது. அதை தொட முடியல. அதனால இந்த வழக்கை எடுக்கும் போது என்னை பெண்கள் மீது சம்பந்தபடுத்தும்போது அசிங்கப்படுத்திவிடலாம். மதிப்பை சிதைச்சிடலாம், நற்பெயரை சிதைசிடலாம்ன்னு செய்யப்பட்டது.
இன்னைக்கு ஒரு மாசம் காலம் பேசக்கூடிய பேச்சா இது. நாட்டுல எந்த பிரச்சனையும் கிடையாதா ? இவுங்க கொடுத்த குற்றச்சாட்டு புதுசு புதுசா இருக்கு. முதல்ல திருமணமானது என்று சொல்லவில்லை, முதல்ல 60 லட்சம் பணம் கொடுத்தேன், நகை கொடுத்தேன் என சொல்லல. ஒவ்வொன்னையும் புதுசு புதுசா சேர்த்து சொல்லும்போது முன்னுக்கு பின்னு மாறி மாறி பேசுறீங்களே என காவல்துறையும் கேட்கல, ஊடகமும் கேட்கல.
அப்போ இதெல்லாம் வெறும் அவதூறு. ஒரு போராட்டக்காரரனை அவதூறு வச்சி மூடிறலாம்ன்னா எப்படி சகிக்கிறது? 60 லட்சம் பணம் கொடுத்தாங்களா ? 30 லட்சம் மதிப்பிலான நகை கொடுத்தார்களா? என்று விசாரணை நடத்தினார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை. சும்மா சொல்லுறாங்க என சொன்னேன்” என விஜயலட்சுமி விவகாரம் குறித்து சீமான் பேசினார்.
The post ”இதெல்லாம் வெறும் அவதூறு”..!! ”புதுசு புதுசா சொல்றாங்க”..!! ”யாரும் கேள்வி கேட்கல”..!! கொந்தளித்த சீமான்..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com