திருவண்ணாமலை சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு! ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

Chief Minister's announcement
திருவண்ணாமலை சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு! ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு! 2

திருவண்ணாமலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூருக்கு கார் ஒன்று இன்று (அக்.15) காலை சென்றது உள்ளது. மேலும் செங்கம் அருகே பக்கிரி பாளையம் என்ற இடத்தில் திருவண்ணாமலை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் எதிரில் வந்த லாரியும் காரும் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இதை குறித்த தகவல் அறிந்த செங்கம் உட்கோட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் விபத்தில் இருந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also Read >> ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! உச்சகட்ட பயத்தில் மக்கள்!!

இது குறித்து முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “திருவண்ணாமலை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இன்று (அக்.15) காலை காரும் லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற துயர செய்தியை கேட்டு வேதனை அடைகிறேன். மேலும் விபத்தில் படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் தனது இரங்கல் செய்தியில் கூறி உள்ளார்.

Previous articleஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! உச்சகட்ட பயத்தில் மக்கள்!!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *