பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்ட பட்டியல் சமூக வாக்குகளைப் பெறுவதன்மூலம் I.N.D.I.A கூட்டணிக்கும் வலுசேர்ப்பதோடு, பட்டியல் சமூகத்துக்கு குரல் கொடுக்கக் கூடிய தேசிய முகமாகவும் திருமா-வை அடையாளப்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும். இதை தான் விரும்புகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி” என்கிறார்கள்.


விடுதலை சிறுத்தைகளின் வெளிமாநில பொறுப்பாளர்களின் ஒருவரான பால சிங்கமிடமே பேசினோம் “விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கடந்த 6, 7 ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆறு மாதங்களாக அமைப்பு ரீதியான கட்டமைப்பை உருவாக்கி கட்சியை வலிமைப்படுத்தி வருகிறோம். மும்பையின் மைய மற்றும் நகர் பகுதிகளிலும், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கட்சி வளர்ந்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com