இந்த நிலையில், கைது செய்தவர்களிடம் விசாரித்து வரும் டெல்லி காவல்துறை, “நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் ஆறு பேரால் பல மாதங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் இப்போது காவலில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே சித்தாந்தத்தைக் கொண்டவர்கள். எனவே அரசுக்கு சில செய்திகளைத் தெரிவிக்க இவ்வாறு செய்திருக்கிறார்கள். யாரேனும் அல்லது எந்த அமைப்பினராலும் இவ்வாறு செய்ய அறிவுறுத்தப்பட்டார்களா என்பதை அறிய முயல்கிறோம்”எனத் தெரிவித்திருக்கிறது.


அதைத் தொடர்ந்து வெளியான தகவலில் வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னைகள், மணிப்பூர் வன்முறை போன்ற பிரச்னைகளால் அவர்கள் வருத்தமடைந்ததாகவும், ஆட்சியில் இருப்பவர்கள் இந்த பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, அவர்களின் கவனத்தை ஈர்க்க வண்ண புகையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com