சமீபத்தில் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இப்போது இன்னொரு விஷயத்தைப் பற்றி பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி “தி ரெக்கார்ட்’ என்ற மோகன்தாஸ் பை பாட்காஸ்டில் பேசும்போது, இந்தியாவுக்கு 1947ல் அரசியல் ரீதியான சுதந்திரம் கிடைத்திருந்தாலும், பஞ்சம் பட்டினியும் தலைவரித்து ஆடிய இந்தியாவில் பொருளாதாரம் சுதந்திரம் கிடைத்தது என்னவோ 1991ல் தான் என்றும், அத்தகைய பொருளாதார சுதந்திரத்தைக் கொண்டு வர காரணமானவர்கள் டாக்டர் மன்மோகன் சிங், மாண்டெக் சிங் அலுவாலியா மற்றும் ப.சிதம்பரம் ஆகிய மூவர்தான் என்று கூறியிருக்கிறார்.


அப்போது அவர் கூறியதாவது, “டாக்டர் மன்மோகன் சிங், மாண்டெக் சிங் அலுவாலியா மற்றும் ப.சிதம்பரம் ஆகிய மூவரும் தாங்கள் கொண்டுவந்த பொருளாதார கொள்கைகளால்தான் இந்தியாவுக்கு ‘பொருளாதார சுதந்திரம்’ கிடைத்தது.
நன்றி
Publisher: www.vikatan.com