வெள்ளம் ஏற்பட்ட பின் மத்திய குழு பாதிப்புகளை ஆய்வு செய்யும். இதனிடையே மாநில பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிவாரண நிதி அறிக்கையை ஆணையர் வழங்குவார். அதில் பேரிடருக்கான உடனடி தேவை மற்றும் நீண்ட கால தேவை என இரண்டு அறிக்கைகள் வழங்கப்படும். அதன்படி மத்திய அரசு முதற்கட்டமாக உடனடி நிதியை விடுவிக்கும். பொதுவாக அச்சமயத்தில் மாநில அரசு கேட்கும் நிதி முழுமையையும் மத்திய அரசு கொடுப்பதில்லை. அதிலிருந்து குறைவான அளவிலேயே நிதியே வழங்கும். அந்த வகையில் நீண்ட கால நிதியாக நகர்ப்புற மழைநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சுமார் 500 கோடியை தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதில் தேசிய பேரிடர் என்ற வழிகாட்டு நெறிமுறை என ஏதும் கிடையாது. ஒரு வேளை மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதற்காக தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருவதாக தெரிகிறது. மேலும் திமுகவினரும், அமைச்சர்களும் கூட தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் எனக் கூறி வருவதை பார்க்கையில், 10ஆண்டு காலம் திமுக ஆட்சியில் இல்லாததால் தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும், பேரிடர் மேலாண்மையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அவர்கள் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என இதன் மூலம் தெரிகிறது. எனவே பாதிப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் நிவாரண நிதி ஆணையர் அளிக்கும் அறிக்கை மற்றும் மத்திய குழுவின் ஆய்வறிக்கையை பொறுத்து தான் மத்திய அரசின் நிவாரண நிதி அறிவிக்கப்படும்: என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
