“நவம்பர் 2-ல் கெஜ்ரிவால் கைதாகலாம்; ஆம் ஆத்மியை பாஜக அழிக்க

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் பின்னர், சி.பி.ஐ-யின் எஃப்.ஐ.ஆரின்படி மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்தது. அதன் பின்னர், தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் உச்ச நீதிமன்றமும் அவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

மணீஷ் சிசோடியா , அரவிந்த் கெஜ்ரிவால்

இதுவொருபுறமிருக்க, புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வரும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. இந்த நிலையில், நவம்பர் 2-ம் தேதி கெஜ்ரிவால் கைதாகலாம் என்று தகவல்கள் வருவதாக ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கூறியிருக்கிறார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதிஷி, “நவம்பர் 2-ம் தேதி கெஜ்ரிவால் கைதுசெய்யப்படுவார் என்று தகவல்கள் வருகின்றன. ஒருவேளை அவர் கைதுசெய்யப்பட்டால், அது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இருக்காது. மாறாக, பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசியதற்காக இருக்கும். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இரண்டு முறை பா.ஜ.க-வை ஆம் ஆத்மி தோற்கடித்திருக்கிறது. மாநகராட்சித் தேர்தலிலும் பா.ஜ.க-வை ஆம் ஆத்மி தோற்கடித்திருக்கிறது.

ஆம் ஆத்மி அமைச்சர்

கெஜ்ரிவாலைப் பார்த்து பிரதமர் மோடி அச்சப்படுகிறார். மேலும், தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது என்பதும் பா.ஜ.க-வுக்குத் தெரியும். ஆம் ஆத்மியை பா.ஜ.க முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது. எனவே, கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்ட பிறகு, அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றின் மூலம் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்களையும், அதன் முதல்வர்களையும் பா.ஜ.க குறிவைக்கும்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரனைத் தோற்கடிக்க முடியாததால், அவரைக் குறிவைப்பார்கள். அதற்கடுத்து, பீகாரில் கூட்டணியை உடைக்க முடியாததால், தேஜஸ்வி யாதவைக் குறிவைப்பார்கள். அதன் பிறகு, கேரளா முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பா.ஜ.க-வால் குறிவைக்கப்படுவார்கள். இருந்தாலும், ஆம் ஆத்மி தலைவர்கள் யாரும் சிறைக்குச் செல்வதற்குப் பயப்படவில்லை. அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் கடைசி மூச்சு வரை போராடுவார்கள்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *