
தமிழகத்தின் அரசு பொதுத்துறை பால் கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனமாக ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யபடும் பால் கொழுப்புச் சத்து அடிப்படையில் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் நிறுவனத்தில் பால் மட்டுமல்லாது பால் மூலம் தயாரிக்கப்படும் பால்கோவா, ஐஸ்கீரிம், நெய், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரிக்கபட்டு வருகிறது. இந்நிலையில், தற்பொழுது தீபாவளி பண்டிகை வர இருப்பதால் ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு மட்டுமல்ல இனிப்பு வகைகளும் கண்ணை கவரும் வகையில் புதிது புதிதாக கடைகளில் விற்பனை செய்யப்படும். இத்தகைய இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனமும் பொதுமக்களுக்காக விற்பனை செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் வெறும் 450 ரூபாய்க்கு சிறப்பு இனிப்பு தொகுப்பை விற்பனை செய்ய உள்ளது.
அதன்படி, ஆவினின் 450 ரூபாய் இனிப்பு தொகுப்பில் காஜீகட்லீ, நட்ஸ் அல்வா, மோத்தி பாக், காஜூ பிஸ்தா ரோல், நெய் பாதுஷா உள்ளிட்ட பொருட்கள் 500 கிராம் comboவாக ரூ.450 க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in