டிசம்பர் 4-ம் தேதிமுதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில், மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென அவைக்குள் குதித்து, மஞ்சள் நிற புகையைப் பரப்பிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேசமயத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஒரு பெண், ஓர் ஆண் போராட்டத்தில் ஈடுபட்டு, உள்ளே பரப்பப்பட்ட வண்ணப் புகையைப் பரப்பினர்.


இறுதியில், நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைக் கைதுசெய்து தனியாக அழைத்துச் சென்று விசாரிக்கத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து, இத்தகைய பாதுகாப்பு மீறல் சம்பவத்துக்கு பா.ஜ.க அரசுதான் பொறுப்பு, அவர்கள் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கின. இந்தச் சம்பவம் நடந்த அடுத்தநாள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், `பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதிலளிக்க வேண்டும்” என எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள் வலியுறுத்தினர்.
நன்றி
Publisher: www.vikatan.com