கிண்டி ஆளுநர் மாளிகையை அதிரவைத்த ரவுடி..!! பெட்ரோல் குண்டு வீச்சால் பெரும் பரபரப்பு..!!

கிண்டி ஆளுநர் மாளிகையை அதிரவைத்த ரவுடி..!! பெட்ரோல் குண்டு வீச்சால் பெரும் பரபரப்பு..!!

கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா என்ற வினோத், சர்வசாதாரணமாக நடந்து வந்தே பெட்ரோல் குண்டு வீசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்தாண்டு பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பினான் கருக்கா வினோத். நீட் தேர்வு வேண்டாம் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது. எனவே, நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்துதான் பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என்று அசால்டாக கூறினார்.

இன்றைய தினம் ஆளுநர் மாளிகையில் குண்டு வீசியது ஏன் என்று கேட்டதற்கு சிறையில் இருந்த போது வெளியே வருவதற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தால் குண்டு வீசியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கருக்கா வினோத் சொல்வது உண்மைதானா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பெட்ரோல் குண்டுகளை தயாரிப்பதற்கு கருக்கா வினோத்துக்கு வேறு யாரும் உறுதுணையாக இருந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கஞ்சா வாங்கவும், சரக்கு வாங்கவும் காசு கொடுத்தால் யார் வீட்டில் வேண்டுமானாலும், பெட்ரோல் குண்டு வீசுவான் என்கின்றனர் ஏரியாவாசிகள். இன்றைய தினம் ஆளுநர் மாளிகையில் யாருடைய தூண்டுதலின் பேரில் பெட்ரோல் குண்டு வீசினான் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *