Teachers Are On Hunger Strike

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வகை பிரிவுகளான ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் நேற்று வரை சுமார் 217 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடங்கள் திறக்க்கப்பட உள்ளன. 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடங்கள் வருகிற 9 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறக்கிறது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களிடம் பள்ளிக்கூடங்களுக்கு செல்லுமாறு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் உங்கள் கோரிக்கைகளை நிதித்துறையிடம் கலந்து பேசி அதை முதல் அமைச்சரிடம் எடுத்து கூறி உங்களுக்கு நல்ல முடிவை கூறுகிறோம். இப்போது, போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். ஆனால், ஆசிரியர் சங்கத்தினர்கள், முதல் அமைச்சரிடம் அறிவிப்பு வந்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என தெரிவித்ததால் பேச்சுவார்த்தையிலும் பயனில்லை. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 3 வகை பிரிவுகளான ஆசிரியர்கள் இன்று முதல் விடுப்பு எடுத்து போராட்டத்தை தொடருகிறார்கள்.
நன்றி
Publisher: jobstamil.in