நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் பா.ஜ.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டுவர பா.ஜ.க விரும்புகிறது என்கிற செய்தி கசியவிடப்பட்டிருக்கிறது. அதே நேரம், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்று பா.ஜ.க கருதுகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.


ஆனால், கடந்த மழைக்கால கூட்டத்தொடரிலும், அதற்கு முன்பாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சிகள் இல்லாமல் குரல் வாக்கெடுப்பிலேயே பல மசோதாக்களை பா.ஜ.க அரசு நிறைவேற்றியது. பா.ஜ.க நினைத்திருந்தால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும் மிக எளிமையாக நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால், அதை பா.ஜ.க அரசு செய்யவில்லை. எனவே, நடைபெறவிருக்கும் இந்த சிறப்புக் கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
இந்த கூட்டத்தொடரில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாதான் பா.ஜ.க-வின் முக்கியமான செயல்திட்டம் என்கிறது டெல்லி அரசியல் வட்டாரம். ‘பா.ஜ.க-வின் செயல் திட்டம் எது வேண்டுமானாலும் இருக்கட்டும். நாங்கள் அதானி ஊழல் விவகாரத்தை பெரிதாக எழுப்புவோம்’ என்கின்றன எதிர்க்கட்சிகள். பார்ப்போம் என்னதான் நடக்கப்போகிறது என்று!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com