எங்குமே இல்லாத அதிசயமாக இந்த வழக்கில்தான் இன்று வரை காவல் துறை எஃப்.ஐ.ஆர். என்ற ஒன்றைப் போடவே இல்லை. 1,345 பேரை நிறுத்தி 1995-ல் நடந்த பிரமாண்ட அடையாள அணிவகுப்பில் ரகளை செய்தார்கள். நீதிபதியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் அடையாள அணிவகுப்பு ரத்தானது. அதன்பின் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அடையாள அணிவகுப்பு நடத்தியாக வேண்டும் என்று கண்டிப்பாகச் சொன்னது. வேறு வழி இன்றி, 50… 50 பேராக அணிவகுப்பு நடத்தப் பட்டு, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டினார்கள்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கைக் கையாண்ட வழக்கறிஞர்கள் வைகை, சம்கிராஜ், இளங்கோ ஆகியோரின் பங்கு மகத்தானது. இந்த வழக்கை நடத்தக் கூடாது என்று பலப் பல கொலை மிரட்டல்கள், கொலை முயற்சிகள், தாக்குதல்களுக்கு இடையில் நாங்கள் கரை சேர்ந்திருக்கிறோம்.
அன்றைய அ.தி.மு.க. அரசில் வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் இந்தக் கொடூரங்களை மூடி மறைத்தார். தமிழகமே கொதித்து எழுந்தபோதும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அது குறித்துச் சலனமே இல்லாமல் இருந்தார். இப்போதும் தீர்ப்பு வந்த பின்னர் அது குறித்துப் பெரிதாக அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை!” என்று முடித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com