தாய், மகள் உள்ளிட்ட இருவரையும், கொடூரமான முறையில், அடித்து கொலை செய்துவிட்டு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனுக்கு சித்தூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சித்தூர் மாவட்டம் தம்பளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஷேக் மௌலாலி என்ற நபருக்கும், கணவரை இழந்த சரளா(39) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சரளா தன்னுடைய தாய் மற்றும் 3 குழந்தைகளோடு, ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கிடையே சரளா மற்றும் மௌலாலி உள்ளிட்டோருக்கிடையிலான பழக்கம் காரணமாக, சரளாவுடனேயே அவர் ஒரே வீட்டில் வசித்து வந்தார். மேலும், அவர்கள் இருவரும் தங்களுடைய கள்ளக்காதலையும் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் தான், திடீரென்று மௌலாலிக்கு சரளாவின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் சரளாவை அவர் அடித்து கொலை செய்து, உடலை அருகில் உள்ள ஏரியில் வீசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சரளாவின் தாயையும் அவர் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான், மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, கர்நாடகாவுக்கு சென்று, அங்கே தங்க வைத்திருந்தார். அப்போது, சரளாவின் பெண் குழந்தையை அவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்நிலையில் தான், சரளாவையும், அவருடைய தாயாரையும் காணவில்லை என்று, உறவினர்கள் காவல் துறையில் புகார் வழங்கினர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கர்நாடகாவில் பதுங்கி இருந்த மௌலாலியை கைது செய்தனர். அதன் பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாய், மகள் இருவரையும் கொலை செய்ததையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை சித்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதில், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி, நீதிபதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.
நன்றி
Publisher: 1newsnation.com