இதை நிர்வாகம் வெளியே கசியாமல் அமுக்கிவிட்டது. தற்போது அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்துவந்த அமராவதியைக் காக்க, மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தவறிவிட்டது. இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். இனி இதுபோல் நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
“பத்து நிமிடங்களில் தடைபட்ட மின்சாரம் மீண்டும் வந்துவிட்டது. மின்சாரம் இல்லை என்றாலும், வென்ட்டிலேட்டர் கருவி இயங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் மருத்துவமனையில் செய்யப்பட்டிருக்கின்றன. நுரையீரலில் ஏற்பட்ட தீவிர பாதிப்பின் காரணமாகவே, அமராவதி உயிரிழந்தார். அவருடைய இறப்புக்கு மின்தடை காரணமில்லை” என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகின்றனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
