லோக் சபா தேர்தலுக்கு முன்பாக நவம்பரில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. இத்தகைய சூழலில், அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியது. அதோடு, பணமோசடி வழக்கு தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ராவுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேற்று திடீர் சோதனை நடத்தியது. இது அரசியல் வட்டாரங்களில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்த காங்கிரஸ் தலைவர்கள், தேர்தல் நெருங்கிவிட்டதால் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை பா.ஜ.க மிரட்டி வருவதாகவும், அதற்கு அடிபணிய மாட்டோம் என்றும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக முதல்வர் அசோக் கெலாட், நாட்டில் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாகவும், தனது அரசை கவிழ்க்க முடியாத காரணத்தால், இது போன்ற சோதனைகள் மூலம் பா.ஜ.க தன்னை குறிவைப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், `நாய்களைவிடவும் அமலாக்கத்துறைதான் அதிகமாக அலைவதாக’ அசோக் கெலாட் தற்போது சாடியிருக்கிறார். ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அமலாக்கத்துறை மற்றும் பா.ஜ.க-வின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அசோக் கெலாட், “இந்த நாட்டில் நாய்களைவிடவும் அமலாக்கத்துறைதான் அதிகமாக அலைகிறது.

ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் சிதைக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் என்னதான் நடக்கிறது… அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ ஆகியவை மத்திய அரசின் (பாஜக) அறிவுறுத்தல்களை பின்பற்றுகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளாக (2014 முதல் பாஜக ஆட்சி) அரசியல் ஆயுதங்களாக அவை மாறிவிட்டன. அதிலும், எதிர்க்கட்சித் தலைவர்கள்மீது மட்டுமே ரெய்டு நடத்தப்படுகிறது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com