ல்வேறு தமிழ்நாட்டில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 27.9.2022 அன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றது. ரியல் எஸ்டேட் தொழிலபதிபர்களுக்கு சொந்தமான இடங்கள், அவர்களுக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. தென்சென்னை பா.ஜ.க மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.


மேலும், தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உதவியாளராகப் பணிபுரிபவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆனால், இந்தச் சோதனைகள் அனைத்தும் சில மணி நேரங்களிலேயே முடிவடைந்தது. இது பல்வேறு சந்தேககங்களை எழுப்புவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இது தொடர்பாக, சிபிஐ (எம்) கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com