குட் நியூஸ்…! அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 14-ம் தேதி வரை நீட்டிப்பு…!

குட் நியூஸ்…! அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 14-ம் தேதி வரை நீட்டிப்பு…!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.8.2023 முதல் நடத்தப்பட்டது. சில அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகள் காலியாக உள்ளன.

எனவே, இது வரை விண்ணப்பிக்காத மாணவர்கள், இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் மூலமாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 12 முதல் 14 வரை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA2023-UG VACANCY”- பற்றி பார்க்கலாம் என உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கூறியுள்ளார்..

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *