இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் நோக்கர்கள், “மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த வன்முறையில் ஆயிரங்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பலர் மிசோரமுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பா.ஜ.க மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதே மனநிலையில் தான் மிசோரம் மக்களும் இருக்கிறார்கள்.


இந்த நேரத்தில் பா.ஜ.க-வுடனும், பிரதமர் மோடியுடனும் இணைந்து செயல்பட்டால் அது மிசோ தேசிய முன்னணிக்கு தேர்தலில் பின்னடையவை ஏற்படுத்துவிடும். அந்த பயத்தில் தான் முதல்வர் ஜோரம்தங்கா, பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்துகொள்ளமாட்டேன் என தெரிவித்திருக்கிறார்” என்றனர். இதை கையில் எடுத்திருக்கும் எதிர்க்கட்சிகள் பிரதமரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். முன்னதாக காவிரி விவகாரத்தை மேற்கோள் காட்டி “I.N.D.I.A’ கூட்டணியில் ஒற்றுமை இல்லை என பிரதமர் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com