இந்த நிலையில் மாஸ்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்க வேண்டும். தன் வீட்டிற்கு வந்து சாட்சியத்தை பதிவு செய்ய வக்கீல் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என். சதீஷ் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியத்தை பதிவு செய்ய வக்கீல் ஆணையராக வக்கீல் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவிட்டார். மேலும் சாட்சியத்தை பதிவு செய்து அறிக்கையாக வருகிற ஜனவரி 21 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். ஏற்கனவே பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கிலும் இதே வக்கில் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
