பணி நிரந்தரக் கோரிக்கை; கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதப்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் செண்பகம் நம்மிடம் பேசுகையில், “90 சதவிகிதம் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டு நாள்களாக வீதியில் நிற்கிறோம். பெண்களுக்கான அரசு என்று கூறிக்கொள்ளும் தி.மு.க அரசு, இதுவரை எங்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. மற்ற மாநிலங்களில் காலி பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் நமது மாநிலத்தில் காலி பணியிடங்கள் மறைக்கப்படுகின்றன. 3,290 செவிலியர்களில் பலர் வெளிநாட்டுக்கும் வேறு வேலைக்கும் சென்றுவிட்டனர். எஞ்சியிருப்பது ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே. ஆனால் காலியிடங்கள் கிட்டத்தட்ட 3,000 இருக்கின்றன. எங்கள் ஆயிரம் பேரை நிரந்தரப் பணியாளராக்குவதில், அரசுக்கு எவ்விதச் சிக்கலும் இல்லை.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நாங்கள் பணியமர்த்தப்பட்டதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எங்கள் உரிமை மறுக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. செவிலியர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பதால், இறப்பு சதவிகிதம் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்தில் நாங்கள் தனியார் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம் வாங்கி வந்தோம். ஆனால், எங்களை மிரட்டி நிர்ப்பந்தம் செய்தனர். அதனடிப்படையில் தான் நாங்கள் தற்காலிக செவிலியர் பணியில் சேர்ந்தோம். சென்னையில் பெருந்தொற்று அதிகரித்து வந்த நிலையில், நாங்கள் பெரும்பாலும் சென்னையில் பணியமர்த்தப்பட்டோம். வாகன வசதிகூட இல்லாத நிலையில், சொந்த செலவில் வாகனங்களை ஏற்படுத்திக் கொண்டு சென்னைக்கு வந்தோம். இந்த நிலையில் தமிழக அரசு எங்களை கைவிட்டிருப்பது வேதனை அளிக்கிறது. நாங்கள் இப்போது தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர முடியும்.

எல்லா தகுதியும் இருந்தும், அரசு ஏன் எங்களுக்கு வேலை தர மறுக்கிறது என்று எங்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இது எங்களின் உரிமை. நாங்கள் நிரந்தர முறை செவிலியர்களாகப் பணியமர்த்தப்பட்டால் மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு கிடைப்பதோடு எங்களுடைய வேலையும் உறுதிசெய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கர்ப்பிணிகள் உட்பட 14-க்கும் மேற்பட்ட செவிலியர்கள்  மயக்கமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மருத்துவமனையிலும் அவர்கள் தண்ணீர் தவிர வேறு எதுவும் உண்ண மறுத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *