தெலங்கானா: இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஒவைசி நியமனம் –

தெலங்கானாவில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றிபெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்ததது. இதில், 39 இடங்களை வென்ற பி.ஆர்.எஸ் இரண்டாவது இடத்தையும், 8 இடங்களில் வென்ற பாஜக 3-வது இடத்தையும், 7 இடங்களில் வென்ற ஒவைசியின் AIMIM கட்சி நான்காவது இடத்தையும் பிடித்தது.

ராகுல் காந்தி - ரேவந்த் ரெட்டி - பிரியங்கா காந்திராகுல் காந்தி - ரேவந்த் ரெட்டி - பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி – ரேவந்த் ரெட்டி – பிரியங்கா காந்தி

அதைத்தொடர்ந்து, வியாழனன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகப் பதவியேற்க, அவருடன் 11 எம்.எல்.ஏ-க்கள் பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில், 1999 முதல் இந்தத் தேர்தலோடு தொடர்ச்சியாக ஆறாவது முறையாக எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற AIMIM காட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஒவைசியை, இந்திய அரசியலமைப்பின் 180-வது பிரிவின் பிரிவு (1)-ன்படி இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படுவதாகச் சட்டமன்றம் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் ஜி கிஷன் ரெட்டி, “பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இந்த இடைக்கால சபாநாயகர் முன்பு பதவியேற்பதைப் புறக்கணிப்பார்கள். முழுநேர சபாநாயகர் நியமிக்கப்பட்ட பிறகு எங்கள் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பார்கள். இதுகுறித்து ஆளுநரிடம் முறையிடுவோம். மேலும், AIMIM போன்ற ஒரு கட்சியுடன் நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம்” என்றார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *