தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சூப்பரான அரசாங்க வேலை வெயிட்டிங்…!

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அங்கு நடக்கும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதில் சேர்ந்து விளையாடவும் செய்வார்கள். ஆனால் பெற்றோர்கள் எங்கு விளையாட்டில் சேர்ந்தால் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள் என்ற பயம் இருக்கும். அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும் என்று விளையாட விடமாட்டார்கள்.
ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. அரசாங்கம் விளையாட்டு வீரர்களுக்கு நிறைய சலுகைகளை செய்கிறது. எனவே தமிழகத்தில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொண்டு பல வீரர்கள் வெற்றியடைந்தனர். அவர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பம் வர வேற்கப்படுகிறது.
Also Read >> Wipro நிறுவனத்தில் Maneger வேலை! மிஸ் பண்ணிடாதீங்க! உடனே Apply பண்ணுங்க!
தமிழகத்தில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிபெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அவர்களுக்கு தமிழக அரசின் 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை வழங்குகிறது. 2018 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு வெற்றி பெற்ற வீரர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டிற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதாவது 40 வயதுக்கு உட்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் www.sdat.tn.gov.in என்னும் இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விண்ணப்பங்களை 31 மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டி, கோடை கால விளையாட்டு போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பு மூலம் நடத்தப்படுகிறது. உலக ஆசிய காமன்வெல்த் சாம்பியன் சிப் போட்டிகள், பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலே குறிப்பிட்ட சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள், தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள்,மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் இந்த இட ஒதுக்கீட்டிற்கான அரசு வேலைக்கு விண்ணபிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in