ஆன்மிகரீதியாக அதில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்னும் தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். 63 லட்சம் பேர் ஏதற்காக நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் வாக்குறுதியாக இதை சொல்லி தான் வெற்றி பெற்றார்கள். இரண்டரை ஆண்டுகள் தாமதமாகத்தான் கொடுத்திருக்கிறார்கள். எனவே விடுபட்ட காலத்துக்கும் சேர்த்து பெண்களின் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்பட வேண்டும்.


அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு. யார் கேட்டுக்கொண்டதின் பேரில் யார் மீதும் ஆய்வு நடத்தப்படாது. அது புலனாய்வு செய்து தவறு செய்தவர்களை நோக்கி பாயும் ஒரு இயக்கம். கபில் சிபல், செந்தில் பாலாஜியை பாஜகவில் சேர அமலாக்கத்துறை சொல்லியதாக சொல்லியிருக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் உண்மை என நமக்கு தெரியாது. ஆனால் அமலாக்கத்துறை அவ்வாறு நடக்காது என்பது எனது நம்பிக்கை. அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணம் குறித்து இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது. நான் நின்று கொண்டிருப்பது என் மண்… அவ்வளவு தான் நான் சொல்ல முடியும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com