குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகிறார்!
இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை, அவர் கலந்து கொள்ளும் விழா நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் வரவேற்கின்றனர். பின்னர், கிண்டி ஆளுநர் மாளிகைக்கு காரில் செல்லும் முர்மு, இன்று இரவு அங்கு தங்குகிறார். நாளை கிழக்குகடற்கரை சாலையில் உள்ளஇந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 8-வதுபட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com